மழை
மழையே நீ ,
குளத்தை நிரப்ப வந்தாயா ,
ஆற்றில் நீர் ஓட வந்தாயா ,
வெப்பத்தைத் தணிக்க வந்தாயா,
உழவரின் குரல்கேட்டு வந்தாயா,
என் விருப்பத்திற்கிணங்க வந்தாயா,
குடையைப் பயன்படுத்த வந்தாயா,
மக்களை இன்பமுற வைக்க வந்தாயா,
போய் வா , என்ற சிறுவர்களை விடு,
மாரியே,தினம் தினம் எமை மகிழ்விக்க வருவாயா?
குறிப்பு :-
" போய் வா , என்ற சிறுவர்களை விடு "
இந்த அடி "ரெயின் ரெயின் கோ அவே " என்ற ஆங்கில பாடலைப் பாடிய சிறுவர்களைக் குறிக்கும் .